Download App

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு சினிமா: ரஹ்மான் ஓப்பன் டாக்

வைகாசி 19, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடிப் படங்களை ஒப்புக்கொண்டு நீண்ட காலமாகிவிட்டது. இந்த விழாவில் அதுகுறித்துப் பேசிய அவர்:

“நான் ஏன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நேரடித் தெலுங்குப் படத்திற்கு இசையமைக்கிறேன் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் இந்தப் படத்தின் கதையும், இயக்குனர் புச்சி பாபுவின் அசாத்தியமான உழைப்பும்தான்,” என்று மனம்திறந்து பாராட்டினார்.

இயக்குனர் புச்சி பாபுவின் உழைப்பைப் பற்றி மேடையில் மிகவும் சிலாகித்த ஏ.ஆர்.ரஹ்மான், அவர் தனக்குக் கொடுத்த பாசிட்டிவ் பிரஷர் குறித்தும் கலகலப்பாகப் பேசினார்.

கதையைச் செதுக்கிய விதம் மற்றும் இசையை வாங்குவதில் புச்சி பாபு காட்டிய ஆர்வம் ரஹ்மானை மிகவும் கவர்ந்துள்ளது.”புச்சி பாபு என்னைத் துரத்தித் துரத்திக் வேலை வாங்கினார்” என்று ரஹ்மான் மேடையில் கிண்டலாகக் குறிப்பிட்டபோது அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

பிரபலங்களின் வருகையாலும், பிரம்மாண்டமான ஏற்பாடுகளாலும் மும்பை விழாவே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஆன்மார்க்கந்த இசையும், புச்சி பாபுவின் இயக்கமும் இணைந்து “பெத்தி” திரைப்படத்தை இந்திய திரையுலகில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை!