Download App

பிப்ரவரி 27-ல் திரையரங்குகளுக்கு வரும் ‘தாய் கிழவி’: எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

மாசி 23, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ் திரையுலகில் எத்தனையோ சவாலான கதாபாத்திரங்களில் நடித்த المخ் நடிகை ராதிகா சரத்குமார், தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உசிலம்பட்டி அருகே உள்ள காடுபட்டி கிராமத்தை பின்னணியாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ‘பவுனுத்தாயி’ என்ற 75 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.ஊரே பயப்படும் அளவுக்கு மிகவும் துணிச்சலான, அதேசமயம் நகைச்சுவை உணர்வு மிக்க ஒரு கிராமத்துத் தாயாக ராதிகா மிரட்டியுள்ளார். ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் மோதல்கள் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.75 வயது மூதாட்டிக்காக ராதிகா மேற்கொண்டுள்ள ஒப்பனை மற்றும் அவரது யதார்த்தமான நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாகத் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இயக்கம் சிவகுமார் முருகேசன், தயாரிப்பு: சிவகார்த்திகேயன், இசை: நிவாஸ் கே. பிரசன்னா ஒளிப்பதிவு: விவேக் விஜய ராஜ் நடிப்பு: ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன், முனிஷ்காந்த், அருள்தாஸ், இளவரசு

இப்படத்திற்காக ராதிகா ஒவ்வொரு நாளும் சுமார் 4.5 மணி நேரம் மேக்கப் போட்டுக்கொண்டு நடித்தது குறிப்பிடத்தக்கது. மலையாள ஒப்பனை கலைஞர் வினீஷ் உதவியுடன் சுமார் 100 மூதாட்டிகளின் தோற்றங்களை ஆய்வு செய்து இந்த ‘தாய் கிழவி’ தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ராதிகாவின் இந்த அர்ப்பணிப்பைக் கண்டு இயக்குநர் பாரதிராஜாவே நெகிழ்ந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

முதலில் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், தற்போது சிறிய மாற்றத்துடன் வரும் பிப்ரவரி 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. கிராமத்து மண்ணின் மணத்தோடும், நகைச்சுவை கலந்த குடும்பக் கதையாகவும் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News