தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய குட் நியூஸ்! சிவகார்த்திகேயன் – பொன்ராம் காம்போவின் மாபெரும் வெற்றிப்படமான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பாகம் 2 விரைவில் தொடங்க உள்ளது என்று இயக்குநர் பொன்ராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் ‘கொம்புசீவி’ படத்தின் புரமோஷன் பேட்டியில்தான் இந்த சூப்பர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
பொன்ராம் கூறியதாவது: “‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’-வுக்கான கதை முழுமையாக ரெடியாக இருக்கு. சிவகார்த்திகேயனின் தற்போதைய வளர்ச்சியையும், ஸ்டார்டமையும் கருத்தில் கொண்டு கதையில் சில மாற்றங்களைச் செய்து வருகிறேன். எல்லாம் தயாரானதும் சிவகார்த்திகேயனிடம் சொல்லி அவர் ஒப்புக்கொண்டால் உடனே படத்தை ஆன் செய்வோம். இது நிச்சயம் நடக்கும்!”
மேலும், “அடுத்ததாக ஒரு முழு காமெடி படத்தையும் தயார் செய்து வருகிறேன். அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.
பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி முன்னதாக
என்று மூன்று படங்களை இணைந்து கொடுத்தது. இதில் முதல் இரண்டும் மதுரை பேக்ரவுண்டில் அமைந்த கிராமத்து காமெடி படங்கள் என்று ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுபவை.
இப்போது அதே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உலகத்துக்கு சீக்கிரம் திரும்ப வருவதாக பொன்ராம் சொல்லி இருப்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் முதல் தமிழ் சினிமா ரசிகர்கள் வரை பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
‘கொம்புசீவி’ டிசம்பர் 19-ல் ரிலீஸ்… அதற்குப் பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ தொடக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் – பொன்ராம் காம்போ திரும்ப வருது… மதுரை சென்டிமென்ட் மீண்டும் வெற்றி பெற போகுது!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…