தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய குட் நியூஸ்! சிவகார்த்திகேயன் – பொன்ராம் காம்போவின் மாபெரும் வெற்றிப்படமான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பாகம் 2 விரைவில் தொடங்க உள்ளது என்று இயக்குநர் பொன்ராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் ‘கொம்புசீவி’ படத்தின் புரமோஷன் பேட்டியில்தான் இந்த சூப்பர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
பொன்ராம் கூறியதாவது: “‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’-வுக்கான கதை முழுமையாக ரெடியாக இருக்கு. சிவகார்த்திகேயனின் தற்போதைய வளர்ச்சியையும், ஸ்டார்டமையும் கருத்தில் கொண்டு கதையில் சில மாற்றங்களைச் செய்து வருகிறேன். எல்லாம் தயாரானதும் சிவகார்த்திகேயனிடம் சொல்லி அவர் ஒப்புக்கொண்டால் உடனே படத்தை ஆன் செய்வோம். இது நிச்சயம் நடக்கும்!”
மேலும், “அடுத்ததாக ஒரு முழு காமெடி படத்தையும் தயார் செய்து வருகிறேன். அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.
பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி முன்னதாக
என்று மூன்று படங்களை இணைந்து கொடுத்தது. இதில் முதல் இரண்டும் மதுரை பேக்ரவுண்டில் அமைந்த கிராமத்து காமெடி படங்கள் என்று ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுபவை.
இப்போது அதே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உலகத்துக்கு சீக்கிரம் திரும்ப வருவதாக பொன்ராம் சொல்லி இருப்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் முதல் தமிழ் சினிமா ரசிகர்கள் வரை பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
‘கொம்புசீவி’ டிசம்பர் 19-ல் ரிலீஸ்… அதற்குப் பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ தொடக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் – பொன்ராம் காம்போ திரும்ப வருது… மதுரை சென்டிமென்ட் மீண்டும் வெற்றி பெற போகுது!
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன்…
அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள…
திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த…
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…