வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகம் நடத்திய “சன்ஸ்கிருதி சமாகம்” எனும் தனித்துவமான கலாச்சார விழா, இந்தியாவின் பாரம்பரியப் பெருமையையும் நவீன தொழில்நுட்பப் புதுமைகளையும் ஒரே மேடையில் இணைத்துச் சிறப்பித்த வரலாற்று நிகழ்வாகும். இதுவரை நடைபெறாத முதன்மையான ட்ரோன் நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களின் அற்புத நிகழ்ச்சிகளுடன், இந்த விழா மத்தியப் பிரதேசத்தில் போபாலின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய மனவ் சங்க்ரஹாலயாவில் அக்டோபர் 11, சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், பத்ம விபூஷண் டாக்டர் சோனல் மான்சிங், ஜாசு கான் உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியப் பண்பாட்டை மெய்மறக்கச் செய்தனர்.
விழாவின் முக்கிய அம்சமாக, மாநிலத்தில் இதுவரை காணப்படாத அளவுக்கு மின்னும் வண்ணமயமான மின்விமானம் (Drone) காட்சி நடந்தது. ஏரிக்கரையைச் சுற்றி வானில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஒளி மற்றும் ஒத்திசைவு மிகுந்த பல்வே று காட்சிகளை உருவாக்கின. இதில் வியத்தகு காட்சிகளாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் ஆகியோரின் உருவங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி முயற்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ட்ரோன் நிகழ்ச்சி, வி.ஐ.டி. போபால் கல்வித் துறையில் வழங்கும் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தியதுடன், “ஆத்மநிர்பர் பாரத்” என்ற நாட்டின் சுயநிறைவு நோக்கத்துடன் இணைந்து, தொழில்நுட்பத் திறனுடன் கூடிய மத்தியப் பிரதேசத்தை உருவாக்கும் நிறுவனமாக வி.ஐ.டி. போபால் தன்னை மீண்டும் நிரூபித்தது.
இந்நிகழ்வு, வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையில், துணைத் தலைவர் திரு. சங்கர் விசுவநாதன், அறக்கட்டளை உறுப்பினர் திருமதி ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோரின் முன்னிலையில் நடைபெற்றது. மாநிலம் மற்றும் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், நிர்வாக மற்றும் கல்வித் துறையின் பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். “சன்ஸ்கிருதி சமாகம்” மத்தியப் பிரதேசத்திற்கான ஒரு பண்பாட்டு மைல்கல் நிகழ்வாக அமைந்தது. பாரம்பரியத்தின் ஆன்மாவையும், தொழில்நுட்பத்தின் ஒளியையும் ஒருங்கிணைத்து மறக்க முடியாத ஒரு இரவை உருவாக்கிய இந்த வரலாற்று விழாவில் முக்கிய விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.
இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ்…
தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூட்டணி சிவகாா்த்திகேயன் - வெங்கட் பிரபு. 'தி கோட்' (The GOAT)…
தொழில்நுட்பம் வளர வளர, அதன் மறுபக்கமான தீமைகளும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் பெரும் தொகைக்கு…
'லவ் டுடே' படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்…