வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகம் நடத்திய “சன்ஸ்கிருதி சமாகம்” எனும் தனித்துவமான கலாச்சார விழா, இந்தியாவின் பாரம்பரியப் பெருமையையும் நவீன தொழில்நுட்பப் புதுமைகளையும் ஒரே மேடையில் இணைத்துச் சிறப்பித்த வரலாற்று நிகழ்வாகும். இதுவரை நடைபெறாத முதன்மையான ட்ரோன் நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களின் அற்புத நிகழ்ச்சிகளுடன், இந்த விழா மத்தியப் பிரதேசத்தில் போபாலின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய மனவ் சங்க்ரஹாலயாவில் அக்டோபர் 11, சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், பத்ம விபூஷண் டாக்டர் சோனல் மான்சிங், ஜாசு கான் உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியப் பண்பாட்டை மெய்மறக்கச் செய்தனர்.
விழாவின் முக்கிய அம்சமாக, மாநிலத்தில் இதுவரை காணப்படாத அளவுக்கு மின்னும் வண்ணமயமான மின்விமானம் (Drone) காட்சி நடந்தது. ஏரிக்கரையைச் சுற்றி வானில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஒளி மற்றும் ஒத்திசைவு மிகுந்த பல்வே று காட்சிகளை உருவாக்கின. இதில் வியத்தகு காட்சிகளாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் ஆகியோரின் உருவங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி முயற்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ட்ரோன் நிகழ்ச்சி, வி.ஐ.டி. போபால் கல்வித் துறையில் வழங்கும் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தியதுடன், “ஆத்மநிர்பர் பாரத்” என்ற நாட்டின் சுயநிறைவு நோக்கத்துடன் இணைந்து, தொழில்நுட்பத் திறனுடன் கூடிய மத்தியப் பிரதேசத்தை உருவாக்கும் நிறுவனமாக வி.ஐ.டி. போபால் தன்னை மீண்டும் நிரூபித்தது.
இந்நிகழ்வு, வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையில், துணைத் தலைவர் திரு. சங்கர் விசுவநாதன், அறக்கட்டளை உறுப்பினர் திருமதி ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோரின் முன்னிலையில் நடைபெற்றது. மாநிலம் மற்றும் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், நிர்வாக மற்றும் கல்வித் துறையின் பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். “சன்ஸ்கிருதி சமாகம்” மத்தியப் பிரதேசத்திற்கான ஒரு பண்பாட்டு மைல்கல் நிகழ்வாக அமைந்தது. பாரம்பரியத்தின் ஆன்மாவையும், தொழில்நுட்பத்தின் ஒளியையும் ஒருங்கிணைத்து மறக்க முடியாத ஒரு இரவை உருவாக்கிய இந்த வரலாற்று விழாவில் முக்கிய விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…