விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி 86 நாட்களைக் கடந்த நிலையில், கடந்த வார இறுதியில் நடந்த எவிக்ஷனில் அமித் பார்கவ் மற்றும் கனி திரு ஆகியோர் வெளியேறினர். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 9 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.
ஃபைனலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், வீ ஜே பார்வதி சாண்ட்ரா ஆமியிடம் அரோரா சின்க்ளேர் (Aurora Sinclair) குறித்து கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
பார்வதி கூறியதாவது: “எனக்கு அரோரா இன்னொரு கனி மாதிரிதான் தெரியுது. பேசுறதுல ஒரு இனிமை இருக்கும். பண்ற விஷயங்கள்ல ஒரு இன்டலிஜென்ஸ் இருந்தாலும் அதுக்குப் பின்னாடி ஒரு கடுமையான வில்லத்தனம் இருக்கும். நம்மள மெண்டலி அட்டாக் பண்ணாங்கன்னா அதை மீறி வரதுக்கு டைம் எடுக்கும். நியாயமான காரணங்களை முன் வச்சு நேருக்கு நேர் போட்டி போடலாம். ஆனா பின்னாடி ஒரு விஷயத்தைப் பண்ணக்கூடாது. ராஜ வேலைகள் எல்லாத்தையும் பார்க்கிற ஒரு குட்டி கனிதான்.”
இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரோராவின் விளையாட்டு முறை குறித்து ஏற்கனவே வீட்டுக்குள் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், பார்வதியின் இந்த வார்த்தைகள் போட்டியை மேலும் சூடேற்றியுள்ளன.
தற்போது வீட்டில் உள்ள 9 போட்டியாளர்கள்: அரோரா, வீ ஜே பார்வதி, சாண்ட்ரா, கானா வினோத், திவ்யா கணேஷ், சுபிக்ஷா குமார், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், கம்ருதீன் உள்ளிட்டோர்.
பிக் பாஸ் சீசன் 9 இறுதிப்போட்டி நெருங்கிவரும் நிலையில், அடுத்தடுத்த டாஸ்க்குகளும் எவிக்ஷன்களும் எப்படி திருப்புமுனைகளை ஏற்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நிகழ்ச்சி ஸ்டார் விஜய் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.