தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. ‘சூரரைப் போற்று’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில், முதல்முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
படக்குழுவின் அறிவிப்புப்படி, ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள புகழ்பெற்ற சாய்ராம் பொறியியல் கல்லூரி (Sairam Engineering College) வளாகத்தில் இந்த விழா மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.
நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா, மற்றும் வில்லனாக ரவி மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது அவரது இசையமைப்பில் வெளியாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
1960-களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு பீரியட் அரசியல் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் பொங்கல் ரேசில் உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படமும் அதே வாரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் இந்த விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…