மலையாள சினிமாவில் சுமார் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பல வெற்றிப் படங்களை இயக்கியும், எழுதியும் சாதனை படைத்த ஸ்ரீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 69.
1977-ம் ஆண்டு ‘மணிமுழக்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், மிகக் குறுகிய காலத்திலேயே நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.
நடிகர் என்பது மட்டுமின்றி, மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளராகவும் (Screenwriter) இவர் அறியப்பட்டார். இவரது சமூக அங்கதம் (Satire) நிறைந்த வசனங்கள் மலையாள சினிமாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின.’நாடோடிக்காற்று’, ‘சந்தேசம்’, ‘வடக்கநோக்கியந்திரம்’, ‘சிந்தாவிஷ்டயாய ஷியாமளா’ போன்ற படங்கள் இன்றும் காலத்தைக் கடந்து ரசிக்கப்படுபவை.
தமிழில் ‘லேசா லேசா ‘, ‘புன்னகை பூவே’ போன்ற படங்களில் நடித்ததோடு, இவர் கதை எழுதி மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘கதா பறயும்போல்’ திரைப்படம், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘குசேலன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீனிவாசன் தனது திரைப்பயணத்திற்காக தேசிய விருது மற்றும் பலமுறை கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். இவரது எளிமையான நடிப்பு மற்றும் யதார்த்தமான கதைகளுக்காக மக்கள் இவரை ‘சகலகலாவல்லவன்’ என்று கொண்டாடினர்.
மறைந்த ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன், தியான ஸ்ரீனிவாசன் என இரு மகன்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் இன்று மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.
“ஒரு சாதாரண மனிதனின் வலியைச் சிரிப்போடு சொல்லும் வித்தை ஸ்ரீனிவாசனுக்கு மட்டுமே கைவந்த கலை.”அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.