உலக அளவில் பிரபலமான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது தெலுங்கு மொழி பேச பயிற்சி எடுத்து வருகிறார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் பான்-இந்தியா மெகா படமான ‘வாரணாசி’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், தெலுங்கில் சரளமாகப் பேசவும், சொந்தக் குரலிலேயே டப்பிங் செய்யவும் தீவிரமாக தயாராகி வருகிறார்.
மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் இப்படம் 2026 ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு முடிந்து 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்தி பின்னணியைச் சேர்ந்த பிரியங்கா, தெலுங்கு மொழியில் பரிட்சயம் இல்லாத நிலையிலும், படக்குழுவினருடன் சிறப்பாகப் பழகவும், தெலுங்கு வசனங்களை உணர்வுபூர்வமாக உச்சரிக்கவும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். “தெலுங்கு பதிப்பிலும் என் சொந்தக் குரலிலேயே டப்பிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்” என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘பாஹுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களுக்குப் பிறகு ராஜமௌலியின் அடுத்த மாபெரும் கனவுத் திட்டமான ‘வாரணாசி’, இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களையும் ஒருசேர கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியங்காவின் இந்த தெலுங்கு முயற்சி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PriyankaLearnsTelugu ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…