நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 8, 2025) சென்னையில் தொடங்கியது. ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்ற இயக்குநர் ஜீத்து மாதவன் தமிழில் அறிமுகமாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் சூர்யா ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் நஸ்ரியா நசீம், ‘பிரேமலு’ புகழ் நஸ்லென், ஆனந்த்ராஜ், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஆவேஷம்’ படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இசையில் இப்படமும் உருவாகிறது.
இன்று காலை சென்னையில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர் ஜீத்து மாதவன், நஸ்ரியா, நஸ்லென், நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் ராஜசேகர் பாண்டியன், எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பூஜை முடிந்த உடனேயே முதற்கட்ட படப்பிடிப்பும் ஆரம்பமானது.
ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் ஆக்சன், உணர்வுகள் கலந்த பவர்ஃபுல் டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஆர்ஜே பாலாஜி இயக்கிய சூர்யாவின் ‘கருப்பு’ ஜனவரி 2026-ல் ரிலீசாகவுள்ள நிலையில், ‘சூர்யா 47’ அடுத்தடுத்து அவரது மாஸ் அவதாரத்தை திரையில் காட்டவுள்ளது. ரசிகர்கள் ஏற்கனவே #Suriya47Trending என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்!
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…