நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் ‘மாநாடு’ படத்தின் வெற்றி இன்னும் இனித்துக் கொண்டே இருக்கிறது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் டி.ஆர் (STR) நாயகனாக நடித்த ‘மாநாடு’ 2021-ல் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக மாறியது. டைம்-லூப் கான்செப்ட்டை முதல்முறையாக தமிழில் தரமாகக் கையாண்ட இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்தது.
இந்நிலையில், நவம்பர் 25, 2025 அன்று படத்தின் நான்காம் ஆண்டு தினத்தை ஒட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
“இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது…
நான்கு வருஷமாச்சு… ஆனாலும் இன்னும் இனிக்குது…
எங்களோட மாநாடு… என்றும் மறக்க முடியாத பயணம்…
நன்றி வெங்கட் பிரபு சார், நன்றி சிம்பு சார்… நன்றி கலைப்புலி எஸ்.தாணு சார்… நன்றி டீம் எல்லாருக்கும்… ❤️”
என பதிவிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
‘மாநாடு’ படத்தின் வெற்றி சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் ஜானர் படங்களுக்கான நம்பிக்கையையும் உறுதிப்படுத்தியது. இன்றைக்கும் ரீ-ரிலீஸ்களிலும், ஓடிடி தளங்களிலும் ரசிகர்கள் கொண்டாடும் இப்படம், உண்மையிலேயே “இன்னும் இனிக்கிற” வெற்றிக் கதையாகவே திகழ்கிறது.
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…