நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் நடக்கவிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா – பாலாஷ் முச்சால் திருமணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. காரணம்: ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மணமகன் பாலாஷும் மன உளைச்சலால் சில மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு ஏகேஜி, ஐவி டிரிப் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன; எல்லாம் நார்மல்தான். “அப்பாவின் நிலையைப் பார்த்து பாலாஷ் அழுது தீர்த்துவிட்டார்” என குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ஹல்தி, மெஹந்தி, சங்கீத் என அனைத்து ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களையும் ஸ்மிருதியும் பாலாஷும் இன்ஸ்டாகிராமில் இருந்து டிலீட் செய்துவிட்டனர். பழைய பிறந்தநாள் வாழ்த்துகளும் க்யூட் போட்டோக்களும் மட்டும் இன்னும் இருக்கின்றன.
வதந்திகள் பரவத் தொடங்கியதும் பாலாஷின் தங்கை, பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால் வேகமாக ஸ்டேட்மென்ட் வெளியிட்டார்: “ஸ்மிருதியின் அப்பாவின் உடல்நலன் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கஷ்டமான நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்க வேண்டுகிறோம்.”
பாலாஷின் அம்மா அமிதா முச்சால், “எங்கள் மகன் தானாக முன்வந்து ‘அப்பா குணமாகும் வரை திருமணம் வேண்டாம்’ என்று முடிவு செய்தான்” என்று கண்கலங்கச் சொன்னார்.
விரைவில் ஸ்ரீனிவாஸ் மந்தனா குணமடையட்டும், ஸ்மிருதி-பாலாஷ் ஜோடி மீண்டும் புன்னகைக்கட்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…