சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகாமல் இருந்த நிலையில், படத்தின் கதைக்களம் இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தை மையப்படுத்தியது என்பதால் சில ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஜீ5 நிறுவனம் தைரியமாக முன்னேறி ரூ.52 கோடிக்கு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கியுள்ளது. இது சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஓடிடி உரிமை என்று கூறப்படுகிறது.
படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது. அனைத்து உரிமைகளும் விற்பனையானதால், ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பராசக்தி’யை பிரம்மாண்ட விளம்பரங்களுடன் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா (தமிழ் அறிமுகம்), பாசில் ஜோசப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்.
1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை பின்னணியாகக் கொண்ட இந்த அரசியல் வரலாற்று டிராமா மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…