‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தி அளித்த பேட்டியில், “பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். அப்படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கிறோம். இது மிகவும் உற்சாகமான படம். 2026-ல் படப்பிடிப்பு தொடங்கி, அதே ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
இதன் மூலம் ஏஜிஎஸ் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. ஏற்கனவே ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை தயாரித்த ஏஜிஎஸ், ‘டியூட்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படம் பிரதீப் ரங்கநாதனின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் என்றும், சயின்ஸ் பிக்ஷன் பாணியில் அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதனின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு இப்படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…