‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தி அளித்த பேட்டியில், “பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். அப்படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கிறோம். இது மிகவும் உற்சாகமான படம். 2026-ல் படப்பிடிப்பு தொடங்கி, அதே ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
இதன் மூலம் ஏஜிஎஸ் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. ஏற்கனவே ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை தயாரித்த ஏஜிஎஸ், ‘டியூட்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படம் பிரதீப் ரங்கநாதனின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் என்றும், சயின்ஸ் பிக்ஷன் பாணியில் அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதனின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு இப்படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது!
திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த…
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…