‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தி அளித்த பேட்டியில், “பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். அப்படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கிறோம். இது மிகவும் உற்சாகமான படம். 2026-ல் படப்பிடிப்பு தொடங்கி, அதே ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
இதன் மூலம் ஏஜிஎஸ் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. ஏற்கனவே ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை தயாரித்த ஏஜிஎஸ், ‘டியூட்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படம் பிரதீப் ரங்கநாதனின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் என்றும், சயின்ஸ் பிக்ஷன் பாணியில் அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதனின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு இப்படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.
இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ்…
தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூட்டணி சிவகாா்த்திகேயன் - வெங்கட் பிரபு. 'தி கோட்' (The GOAT)…
தொழில்நுட்பம் வளர வளர, அதன் மறுபக்கமான தீமைகளும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் பெரும் தொகைக்கு…
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு) நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி,…