கே.ஜி.எஃப் சாம்ராஜ்யத்தை உருவாக்கி பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்த ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த மாபெரும் படம் ‘டாக்ஸிக்’ (Toxic). இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று ஹீரோ யாஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பிரம்மாண்ட போஸ்டருடன் பதிவிட்ட யாஷ், “TOXIC – A Fairy Tale for Grown-ups 19th March 2026 இன்னும் சரியாக 100 நாட்களில் உங்களைச் சந்திக்கிறது!” என்று கூறியுள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், ஷைனி அஹூஜா உள்ளிட்ட பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
கே.ஜி.எஃப்-க்கு மேஜிக் செய்த இசையமைப்பாளர் ரவி பசூர்தான் ‘டாக்ஸிக்’-குக்கும் இசையமைக்கிறார்.
‘A Film by Geetu Mohandas’ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் இப்படம் கே.ஜி.எஃப்-ஐ விட பல மடங்கு பெரிய ஸ்கேலில் உருவாகியிருப்பதாகவும், கோவா டிரக் வாரை மையப்படுத்திய கதை என்றும் படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படங்களில் ஒன்றான ‘டாக்ஸிக்’ இப்போது 2026 மார்ச் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெடிக்கத் தயாராக உள்ளது!
ரசிகர்கள் ஏற்கெனவே #100DaysForToxic, #ToxicOnMarch19 என ட்ரெண்ட் செய்து கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.
ராக்கிங் ஸ்டார் யாஷின் மிரட்டல் அவதாரம் மீண்டும் வருகிறது… Get Ready!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…