தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9, 2026 அன்று உலகளவில் திரைக்கு வர உள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க சன் டிவி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிறகு, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி ஆகிய சேனல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.
தற்போது, ஜீ தமிழ் சேனல் தான் ‘ஜனநாயகன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சேனல் சார்பில் சுமார் 64 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், பொங்கல் ரிலீஸாக வரும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் OTT உரிமையை ஜீ நிறுவனமே (Zee5) வாங்கியுள்ளது. அதற்காக 52 கோடி ரூபாய் வியாபாரம் நடந்திருப்பதாக தெரிகிறது.
‘ஜனநாயகன்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் ஏற்கனவே பிரமாண்ட அளவில் நடந்து வரும் நிலையில், இந்த சாட்டிலைட் டீல் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜய்யின் இறுதி திரைப்படமாக இருப்பதால், படத்தின் வியாபாரம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…